Saturday, June 6, 2009

தோழியை காதலித்தேன்!!



பகல்
கனவு பலித்தது அவள் என் தோளில் சாய்கையில் ,
சுற்றி இருந்த செடிகளையும், மரங்களையும்
திரும்ப சொல்லி மிரட்டிய என் விரல்களை அவள் பிடிக்க ,
இந்நொடியே இப்பொழுதே இறந்து போக கூடாதா?
என்றெழுதிய காதல் கிருகர்களின் வரிகளை நானும் முனுங்கலானேன் .
என்னை சுற்றி இருந்த அனைத்தும் ஸ்தம்பித்தது போன்ற உணர்வு .
என் இதய துடிப்பும் அவள் சுவாசிக்கும் சப்தமும் ,
எங்கள் மௌனத்தை குடைந்து கொண்டிருக்க ,
பல மாதங்களாக வரிசை படுத்திய கேள்விகளுடன்,
குழப்பமான முடிவுடன் , தோளில் அவளை சுமந்தபடி ,
வாய் அடைத்து நான் அமர்ந்திருக்க,
அவள் பேச தொடங்கினால்..
வார்த்தைகளும் கண்ணீர் துளிகளும் எண்ணிக்கையில்
போட்டி போட தொடங்கியது.
கேள்விகள் ஒவ்வொன்றும் விழும்புன் கொண்டு மாய்ந்து விட
நெருக்கம் அதிகரித்தது வெட்கத்தை நசுக்கியபடி.
கோர்த்த கைகளில் வெப்பம் தொடங்கிட ,
எது என் விரல்கள் என்று தெரியவில்லை,
தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை.
நீ என் நண்பன், அவன் என் காதலன் என்றாள்,
காரணம் கேட்கவில்லை அவள் கூறவுமில்லை.
மௌனத்தை உளவவிட்டு விழுங்கினேன் உணர்ச்சிகளை.
மன்னிப்பு கேட்டாள், போய்விடாதே என்றாள்,
என் மடியை கண்ணீரில் நனைத்தபடி.
இதுதான் உண்மையான நட்போ?
சரி என்று சொல்ல நான் வாய் திறக்க,
விழுங்கிய உணர்ச்சிகள் என் கண் துவாரங்கள் வழியாக தப்பியது,
கண்ணீரை துடைத்தபடி கட்டி அனைத்தால் ,
நான் பெருமூச்சி விட ,
உடைந்தது என் காதல் கோட்டை
எனக்கே தெரியாமல்.
வாழ்க்கை என்ற கண்ணாடி ,
நாம் என்ன நினைத்து பார்கிறோமோ,
அதை அப்படியே பிரதிபலித்து காட்டுகிறது.
உன் பிரதிபலிப்பை ரசிக்க தொடங்கிவிடு,
வாழ்க்கை எளிதாகிவிடும்!!



தமிழ் படிக்க இயலாதவர்கள் ,
கேட்டு ரசிக்க இதோ ஒளியுடன் கூடிய என் குரல் ஒலி !!
(I have recited my poem for those who cant read Tamil)






கத்தியின்றி, ரத்தமின்றி உயிர்வதைக்கும் காதலை ,
தேடி சென்று மாய்ந்த பின் வாழும் கோடிக்கணக்கான நண்பர்களில்,
நானும் ஒருவன் !!

1 comment:

  1. as u know, this is all our favorite one... enakku pugazhradhakku kooda words theriyala, but nee evlo azhaga ovvoru vaarthayayum kavidai akki irukka..!!

    ReplyDelete