சந்தர்பங்கள் அமையாத உங்க வாழ்கையில் காதலோ இல்ல தப்புன்னு இப்ப நீங்க சுட்டிகாற்ற எந்த விஷயத்த பத்தியும் தெரிஞ்சிக்கிற வாய்ப்பு உங்களுக்கு கிடச்சிருக்காது. வாய்ப்புகள் கிடச்சும் நிலைமாராதவன் தான் மார்தட்டிக்கனும் இல்லையா?? வெறும் ஒலியும் ஒளியும் பாத்து கொண்டிருந்த நாம். HBO, Star movies பார்க்க பழகிக்கிட்டோம். ஆனால் நவீனமயமாக்கபட்ட இந்த வாழ்கையின் side effects ஐ இன்னும் நம்மால ஜீரணம் செய்ய முடியவில்லை.
உங்கள் பிள்ளைகள் கலப்பு திருமணம், living together வாழ்க்கைமுறையில் ஈடுபடும்போது உங்களுக்கு ஏற்படும் வலியும், ஆதங்கமும் தப்புன்னு நான் சொல்லல. இனி இதை மாற்ற முடியாதுன்னு புரிஞ்சிகுங்கனு தான் சொல்றேன். 3G உலகில் நாங்க இனி Telegram காலத்தை நினைத்துபார்க்கும் அவசியம் எங்களுக்கு எற்படாதுன்னு தான் சொல்றேன் . நீங்க வாழ்ந்த சூழலை இனி நாங்கள் பெற முடியாது . அறிவியலும், அடுத்த தலைமுறையும் ,சமுதாய புரட்சியால் ஏற்பட்ட கலாச்சார மாற்றத்தை உணர மறுகின்றனர்.
ஆனா பழியத் தூக்கி மொத்தமா இந்தத் தலை முறை மேல போட முடியாது. சின்ன வயசுல இருந்தே அவன மாதிரி நல்லா படிச்சி வகுப்புல முதல் வரணும். இவன மாதிரி நீயும் Engineer ஆகணும்னு விரல் காட்டி அவனை சுற்றியிருபவர்களிடம் அவனை கோர்த்து விட்டுட்டோம் . வளர்ந்த அப்பரமும் தன்னை சுற்றியிருபவர்கலையே follow செய்யலான்ற மனோபாவதிருக்கு தள்ளப் படுகிறான்.கடிதம் என்ற வார்த்தைக்கும் காகிதத்திற்குமே இந்த காலத்துல இடைவெளி ஜாஸ்தி ஆகிடுச்சு . உறவுகளை பத்தி கேக்கணுமா, family க்காக சம்பாதிக்கிறேன்னு family கூட இருக்கமுடியாமல், நேரம் செலவிட முடியாத சூழல்தான் இன்னைக்கு இருக்கு. அப்பா அம்மா மகனுகுள்ள இடைவெளி அதிகமாகுது. இடைவெளியை யாரு நிரப்புராங்களோ அவங்களோட காதல் ஏற்படுது.
குடும்பத்துக்காக குடும்பத்த மறந்து உழைச்ச உங்களக் குத்தம் சொல்றதா?. பாசத்துக்காக ஏங்கி பாதை மாறுன அவங்கள குத்தம் சொல்றதா?.
இந்தத் தலை முறைக்கு என் முழு ஆதரவுன்னு நினைக்காதீங்க. அனுபவம் என்ற வார்த்தை முழுதாக புரிய வாழ்க்கை என்ற வார்த்தையோட முடிவுல நின்னுதான் பார்க்கணும். மனசுக்கு புடிச்சவனோட கைகோர்கரதோடமட்டும் உங்க வாழ்க்கை முடியறதில்ல. உங்கள் மனதையும் வீட்டின் கதவையும் திறந்துவைங்க நாளை உங்க மகளும் காதலனுடன் வரலாம் கதவை அடைக்காதீங்க.!!